வெள்ளி, 28 ஜனவரி, 2011

செயல்திட்ட முன்வடிவு அய்க்கியப் பேரவையிடம் சமர்ப்பிப்பு!

காயல்பட்டினம் நகரின் பொதுநல அமைப்புகளான இளைஞர் அய்க்கிய முன்னணி (YUF), ரெட் ஸ்டார் சங்கம், மஜ்லிஸுல் கவ்து சங்கம் (தாயிம்பள்ளி), அய்க்கிய விளையாட்டு சங்கம் (USC), மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை (MARO), காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு (QYSS), அல்அமீன் இளைஞர் சங்கம் (AYWA) ஆகிய அமைப்புகள் இணைந்து “காயல்பட்டினம் - வருங்கால செயல்திட்ட முன்வடிவு” என்ற செயல்தி்ட்ட முன்வடிவை (proposal) காயல்பட்டினம் நகரின் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பாகக் கருதப்படும் காயல்பட்டினம் முஸ்லிம் அய்க்கியப் பேரவையிடம் 24.11.2010 அன்று சமர்ப்பித்தது.


அன்றைய தினம், அமீரக காயல் நல மன்றத்தின் அழைப்பின் பேரில், அதன் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து துபை புறப்பட்டுச் சென்றேன்.


7 பொதுநல அமைப்புகளின் சார்பாக, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் பொருளாளர் சகோதரர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் செயல்திட்ட முன்வடிவை காயல்பட்டினம் முஸ்லிம் அய்க்கியப் பேரவையிடம் சமர்ப்பித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக